இது நிணநீர் ஓட்டத் தடை என்றும் அழைக்கப்படும். நிணநீர் மண்டலத்தின் செயல்பாட்டுக் குறைவால் ஆங்காங்கே பாய்மங்கள் தேங்கி திசுக்கள் வீக்கம் அடைகின்றன. இடைத்திசு பாய்மங்களை நிணநீர் மண்டலம் நெஞ்சு நாளத்துக்குத் திருப்பி அனுப்புகிறது. பின் அவை இரத்த ஓட்டத்திற்குள் கலந்து அங்கிருந்து மீண்டும் திசுக்களுக்கு அனுப்பப்படுகிறது.
இரண்டு முக்கிய வகையான அவையவ வீக்கங்கள் உள்ளன:
முதனிலை அவயவவீக்கம்
கோளாறான மரபணுக்களால் ஏற்படும் இவை பிறப்பில் அல்லது வயதுக்கு வந்தபின் உருவாகிறது.
இரண்டாம் நிலை அவயவவீக்கம்
தொற்று, காயம், அதிர்ச்சி அல்லது புற்று நோயால் நிணநீர் மண்டலம் பாதிக்கப்படுவதால் உண்டாகிறது.
அவயவங்கள் முழுவதிலும் ஏற்படும் வீக்கமே முக்கிய அறிகுறி.
பிற அறிகுறிகளாவன:
காரணங்கள்
முதனிலை மற்றும் இரண்டாம் நிலை அவயவ வீக்கங்களுக்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளன.
நிணநீர் மண்டலம் வழியாக புற்று நோய் உடல் முழுவதும் பரவுகிறது. இதற்கான அறுவை மருத்துவத்தின் போது புற்றுநோயுள்ள நிணநீர்ச்சுரப்பிகள் அகற்றப்படுகின்றன. கீழ் வரும் சிகிச்சைகளை அளிப்பதால் ஏற்படும் சிக்கல்களின் மூலமாக அவயவ வீக்கம் ஏற்படும் அபாயம் உண்டு:
கதிர்வீச்சு சிகிச்சை
கதிர்வீச்சு மருத்துவம் கட்டுப்படுத்தப்பட்ட அதி ஆற்றல் கதிர்வீச்சை கொண்டு புற்று திசுக்களை அழிக்கிறது. எனினும் சிலசமயம் நல்ல திசுக்களும் அழிக்கப்படலாம்.
நரம்பு நோய்கள்
நரம்புகள் வழியாக இரத்தம் செல்வதைத் தடுக்கும் நரம்பு நோய்கள் சிலருக்கு அவயவ வீக்கத்தை ஏற்படுத்தலாம். அசாதாரண அல்லது சிதைவடைந்த நரம்புகளால் திசுக்களில் அதிக இரத்தம் அல்லது பாய்மங்கள் தேங்கி திசுக்கள் சிதைவடைகின்றன. இது நிணநீர் மண்டலத்தில் சுற்றோட்டத்தைப் பாதிக்கலாம்.
அவயவ வீக்கத்தை உண்டாக்கும் சில நரம்பு நோய்களாவன:
ஆழ்நரம்பு இரத்த உறைவு (டி.வி.டி) — உடலில் உள்ள ஆழமான நரம்பு ஒன்றில் உண்டாகும் இரத்த உறைவு
சுருள்சிரை (நரம்பு வீக்கமும் விரிவடைதலும்) — நரம்புகளில் இரத்தம் குறைவாகச் செல்வதால் நரம்பு அழுத்தம் அதிகமாகி அதிக பாய்மம் திசுக்களுக்குள் செல்கிறது.
தொற்றுநோய்கள்
சில வேளைகளில் தொற்றும் அவயவ வீக்கத்தை உண்டாக்கும்.
புரையோடுதல் நோய், பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்றாகும். இதனால் உண்டாகும் அவயவ வீக்கம் சில வேளைகளில் அந்நோயின் சிக்கலான கட்டமாகவும் இருக்கும். கடுமையான புரையோடுதலில், நிணநீர்ச் சுரப்பிகளை அல்லது இரத்தக்குழாய்களைத் தொற்று சுற்றி இருக்கும் திசுக்களை சிதைப்பதால் வடு ஏற்படும்.
பாரசைட்டால் ஏற்படும் யானைக்கால் நோய் அவயவ வீக்கத்தை உண்டாக்கும் இன்னொரு தொற்று நோயாகும். இந்தியாவில் சில பகுதிகளில் இருப்பது போல் வளர்ந்து வரும் நாடுகளில் இது பரவலாகக் காணப்படுகிறது.
அழற்சி
இச்சோதனைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:
அளவு நாடா
4 செ.மீ. (1.6 அங்குலம்) இடைவெளி விட்டு காலில் மேல் நோக்கி அவயவ சுற்றளவு அளக்கப்பட்டு பின் அவயவ கன அளவு கணக்கிடப்படுகிறது.
நீர் இடப்பெயற்சி முறை:
ஒரு பொருள் இடப்பெயற்சி செய்யும் நீரின் அளவைக் கொண்டு கன அளவைக் கணக்கிட முடியும் என்ற அறிவியல் கொள்கையின் அடிப்படையில் இச்சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
நோயாளி தன் பாதிக்கப்பட்ட அவயவத்தை ஒரு தொட்டியில் உள்ள தண்ணீருக்குள் வைக்கும் போது இடப்பெயர்ச்சியாகும் நீரின் அளவைக் கணக்கிடுகின்றனர். இந்த அளவைக் கொண்டு அவயவ கன அளவு கணக்கிடப்படும்.
அகச்சிவப்பு கதிர்
அகச்சிவப்பு கதிர்களைக் கொண்டு அவயவத்தின் கன அளவு அளவிடப்படுகிறது. அவயவ வீக்கம் எவ்வளவு என்று இதன் மூலம் துல்லியமாகக் கணக்கிடப்படும்.
பிம்ப சோதனைகள்
பிம்ப சோதனைகள் கொண்டும் நோயைக் கண்டறிய முடியும். அவையாவன:
ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்
கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020
பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள...
ரத்த அழுத்தத்திற்கான ஹோமியோபதி சிகிச்சை பற்றி இங்க...
3 வகை உடல் 6 வகை பருமன் பற்றி இங்கு கொடுக்கப்பட்டு...
24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள்...