நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான சிகிச்சையை மூன்று வகைகளில் மேற்கொள்ளலாம் அவையாவன, மருந்திலேயே மேலாண்மை செய்வது, டையாலிஸிஸ் மற்றும் மாற்று சிறுநீரகத்தைப் பொருத்துவது ஆகும்.
* இத்தகைய நோயாளிகள் யாவரும் ஆரம்ப காலத்தில் வெறும் மருத்துவத்திலேயே சிகிச்சையை தொடருவார்கள் (மருந்து, உணவுப் பழக்க வழக்கங்கள், மற்றும் முறையாக கவனம் கொள்ளுதல்)
* சிறுநீரகங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தால், டையாலிஸிஸ் அல்லது மாற்று சிறுநீரகத்தைப் பொருத்துவது அவசியமாகும்.
நீண்ட நாள் இருந்து தாக்கும் இந்த நோய்க்கு குணமடையும் தன்மையே கிடையாது. மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் டையாலிஸிஸ் அல்லது மாற்று சிறுநீரகத்தைப் பொருத்துதல் கட்டாயமாகிறது. விலை மிக உயர்வாக இருப்பதால், இந்தியாவில் 5-10 சதவீத நோயாளிகளுக்கே டையாலிஸிஸ் மேற்கொள்ளப்படுகிறது.
மீதமுள்ளவர்கள் இறந்து விடுவதைத் தவிர வேறு வழி இல்லை. ஆகவே ஆரம்ப காலத்திலேயே நோயைக் கண்டு கொண்டு சிகிச்சையை ஆரம்பிப்பது நல்லது. அது ஒன்றுதான் வழி. செலவும் குறைவாகும். அதன் மூலம் டையாலிஸிஸின் தேவையைக் குறைக்கலாம். அல்லது மாற்று சிறுநீரகம் பொருத்துவதை தள்ளிப் போடலாம்.
ஆரம்ப காலத்திலேயே சிகிச்சையை ஆரம்பிப்பது சாலச் சிறந்தது. பெரும்பாலான நோயாளிகளுக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் போவதுதான் ஒரு குறை. மருத்துவத்தை நடுவில் நிறுத்தினால், நிலைமை படு மோசமாகி விடும். அதற்குப் பிறகு சில நாட்களுக்குள்ளேயே அவர்களுக்கு மிகுந்த செலவில் சிகிச்சையை ஆரம்பிக்க நேரிடும். அது டையாலிஸிஸ் ஆகவோ அல்லது மாற்றுச் சிறுநீரகத்தைப் பொருத்துவதாகவோ இருக்கலாம்.
1. நோயின் தொடர்ச்சியைக் குறைத்தல்
2. நோய்க்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து அவற்றிற்கு சிகிச்சை அளித்தல்.
3. அறிகுறிகளை அகற்றச் செய்து நோயின் சிக்கல்களை அகற்றுவதற்கு மருத்துவம் மேற்கொள்ளுதல்.
4. இருதயத்தைச் சுற்றி ஓடும் இரத்தக் குழாய்களை பாதிக்கும் சாத்தியக் கூற்றை அகற்றச் செய்தல்.
5. டையாலிஸிஸ் அல்லது மாற்றுச்சிறுநீரகம் பொருத்தும் தேவையைத் தள்ளிப்போடுதல்.
கீழ்க் காணும் அட்டவணையில் அந்த உத்திகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன.
நோயின் நிலை |
பரிந்துரைக்கப் படும் சிகிச்சை |
எல்லா நிலைகளிலும் இதைச் செய்யவும் |
|
1 |
|
2 |
நோய் தொடர்ச்சியை கூர்மையாக கவனித்து உடன் சேரும் நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கவும். |
3 |
சிக்கல்களை கணித்து சிகிச்சை செய்யவும் சிறுநீரகங்களைப் பற்றி தெரிந்த நெஃப்ராலஜிஸ்டிடம் நோயாளியைக் காண்பித்து ஆலோசனைப் பெறவும் |
4 |
செயற்கை சிறுநீரகம் பொருத்த வேண்டிய நிலை பற்றி நோயாளிக்கு எடுத்துச் சொல்லி சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அவரைத் தயார் செய்யவும் |
5 |
டையாலிஸிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யவும் |
கீழ்க்கண்ட வழியில் நோயைக் கண்டு கொண்டு சிகிச்சையை ஆரம்பிக்கவும். அது நோயின் தொடர்ச்சியை தாமதப்படுத்தலாம் அல்லது தடுக்கலாம் அல்லது நோயின் போக்கை மாற்று திசையில் கூடதிருப்பிவிடலாம்.
சிறுநீரகம் செயலிழக்கும் விகிதத்தை அதிகப்படுத்தும் காரணிகளைக் கண்டறிந்து சிகிச்சை செய்யவும். இவற்றின் மூலம் சிறுநீரகங்களின் செயல்பாடு மேம்பாடு அடையலாம். இவ்வகையில் பொதுவாகக் காணப்படும் காரணங்களாவன:
திரவங்களின் மிக அதிக சேர்க்கை. இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு வெகுவாகக்கூடுதல், சிறுநீரகபாதிப்பினால் இருதயத்திற்கு, மூளைக்கு மற்றும் நுரையீரல்களுக்கு வரும் மிக மோசமான கேடுகள் போன்றவை பொதுவாக ஏற்படும் சிக்கல்கள் ஆகும்.
நோயின் வகையையும் தீவிரத்தையும் பொறுத்து, உணவுப் பழக்கங்களையும் கட்டுப் படுத்த வேண்டும்.
இவ்வகை நோயாளிகள் மிக சீக்கிரமாகவே மேற்சொன்ன மருத்துவரைக் கண்டு ஆலோசிக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசிப்பதும், டையாலிஸிஸுக்கு முன் பெறும் கல்வியும் நோயாளிக்கு மனத் தொய்வையோ இறப்பையோ ஏற்படச் செய்யாது. விரைவாக ஆலோசனை பெறுதல் நோய் முற்றுவதைத் தடுத்து சிறுநீரகத்தை மாற்றும் முயற்சியை சற்றுதள்ளிப் போட உதவுகிறது.
நோயின் தீவிரத்தை தடுக்க அல்லது தாமதப்படுத்த மேற்கொள்ள வேண்டிய முக்கிய சிகிச்சை?
இந்த நோய்க்கு அடிப்படைக் காரணம் எதுவாக இருந்தாலும், இரத்த அழுத்தத்தை சரியாக கட்டுப்படுத்தி வந்தால் அதுவே மிக முக்கியமான சிகிச்சையாகிறது. கட்டுக்குள் அடங்காத நிலையில் இரத்த அழுத்தம் இருந்து கொண்டிருந்தால், இந்த நோய் மிக வேகமாக முற்றக் கூடிய அபாயம் இருக்கிறது. இருதய பாதிப்பும் பக்க வாத நோய்தாக்கக் கூடிய அபாயமும் சேரும்.
உயர்இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் யாவை?
உயர்இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற மருந்தை மருத்துவரே பரிந்துரைப்பார். மிகவும் சாதாரணமாக உபயோகிக்கப்படும் மருந்துகளாவன:
ACE என்று சொல்லக்கூடிய ஆன்ஜியோடென்சின் நொதிகளும், ARB என்று சொல்லக்கூடிய ஆன்ஜியோடென்சின் ரிசப்டர் தடுப்பான்களும்
முதல் நிலை மருத்துவமாக பரிந்துரைக்கப்படுகின்றன. இவை இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, நோயின் தீவிரம் மிகைப்படாமல் பாதுகாக்கும்.
இந்நோயில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன் நோக்கம் என்ன?
இரத்த அழுத்தத்தை எப்பொழுதும் 130/ 80 மி.மி.க்கு குறைவாக வைத்திருக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.
இரத்த அழுத்தத்தை கண்காணிக்கவும் கட்டுப் படுத்தவும் உகந்த வழி எது?
அடிக்கடி மருத்துவரை சந்திப்பதன்மூலம் இரத்த அழுத்தத்தின் நிலையை அறியலாம். ஆனால், இரத்த அழுத்தத்தின் அளவை கண்டறிய உதவும் சாதனத்தை வாங்கி, தனக்குத்தானே வீட்டில் கண்காணித்து வருவது சாலச் சிறந்த்து. இரத்த அழுத்த அளவுகளை வரைபடமாக குறித்து வைத்தால், அதற்கேற்ற மருந்துகளைப் பரிந்துரைக்க மருத்துவருக்கு உதவியாக இருக்கும்.
டையூரிடிக்ஸ் மருந்துகள் இந்த நோயாளிகளுக்கு எப்படி உதவுகிறது?
சிறுநீரின் அளவு குறைந்தால், வீக்கமும் மூச்சுத் திணறலும் ஏற்படும். எனவே இவ்வகை மருந்துகள் சிறுநீரின் அளவை அதிகரிக்கச்செய்து வீக்கம் மற்றும் மூச்சுத்திணறலை குறைக்கும். ஆனால் இந்த மருந்துகள், சிறுநீரின் அளவை கூட்டுமே ஒழிய சிறுநீரகங்களின் செயல்பாட்டில் எந்தவித மேம்பாட்டையும் காண்பிக்காது.
இவ்வகை நோய் தாக்கும்பொழுது இரத்தசோகை ஏன் ஏற்படுகிறது?
சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்து கொண்டிருக்கும்பொழுது, எரித்ரோபொயிடின் எனும் ஒரு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இதுவே எலும்புகளின் மூலமாக சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது. இந்த நோய்களின் காரணமாக, சிறுநீரகங்களின் செயல்பாட்டுத் திறன் குறையும்பொழுது, இந்த ஹார் மோனின் உற்பத்தியும் குறைந்து இரத்த சோகைக்கு காரணமாகிறது.
இரும்புச்சத்தைக் கொடுக்கும் மாத்திரைகள், சில சமயங்களில் விட்டமின்கள், நரம்பு ஊசிகளின் மூலம் அவற்றை உடலுக்குள் செலுத்துதல், போன்றவையே முதன் முதலில் இந்த நோயைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முயற்சிகளாகும். மருந்துகளுக்குக் கட்டுப்படாத மிக மோசமாக தாக்கும் இரத்த சோகை ஏற்பட்டால் உடலுக்குள் ஊசிகள் மூலம் செயற்கை எரித்ரோபொயிடின் என்ற மருந்தை பாதுகாப்பாகச் செலுத்த வேண்டும். அதன் மூலம் எலும்புக்கு சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் திறன் கிட்டுகிறது. அதைத் தவிர உடலுக்குள் இரத்தத்தை ஏற்றுவதும் இன்னொரு திறன்மிக்க வழியாகும். இது அவசரகால சிகிச்சையாகும். ஆனால் பெருவாரியாக இதை யாரும் பரிந்துரைக்காமல் விடுவதற்குக் காரணம் தொற்றுக்கள் தொற்றிவிடும் அபாயம் இதில் இருக்கிறது.
இந்த நோயினால் வரும் இரத்தசோகையை ஏன் மருத்துவத்தால் நீக்கவேண்டும்?
சிவப்பு அணுக்கள், நுரையீரலிலிருந்து பிராணவாயுவை உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்கின்றன. அன்றாட உடலுழைப்பிற்கு வேண்டிய சக்தியை எல்லாம், அவை கொண்டு செல்கின்றன. இரத்த சோகை அல்லது குறைவான அளவில் உள்ள ஹீமோக்ளோபின் உடல் சோர்வுக்கும், நலிவுக்கும், உடல் உழைப்பு உரிய அளவுக்கு செய்ய முடியாமலும் கொண்டு சென்றுவிடுகிறது. உடலை வருத்தி கொண்டால் ஏற்படும் களைப்பு, இருதயம் மிக வேகமாகத் துடித்தல், மனத்தை ஒன்று குவித்து எதிலும் ஈடுபட முடியாமற் போதல், மார்பு வலி முதலியவற்றை ஏற்படுத்தும். ஆகவே இந்த நோயினால் வரும் இரத்த சோகைக்கு சிகிச்சை செய்தே ஆக வேண்டும்.
ஆதாரம் : http://kidneyeducation.com/Tamil
கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020