இது புற உள்நாக்கு சீழ்க்கட்டி எனவும் அழைக்கப்படும். உள்நாக்கிற்கும் அதை சுற்றியுள்ள பகுதிக்கும் இடையில் சீழ் கட்டுதலே இந்நோய். ஓர் உள்நாக்கிற்கும், தொண்டைச் சுவருக்கும் இடையில் சீழ்க்கட்டி உண்டாகிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட ஓர் உள்நாக்கில் இருந்து அருகிலுள்ள பகுதிகளுக்குத் தொற்று பரவும்.
தொண்டை வீக்கத்தின் அறிகுறிகளில் அடங்குவன:
தொண்டைவலி அதிகரித்தல் (பொதுவாக ஒரு பக்கம்)
பொதுவாக, கடுமையான உள்நாக்கு அழற்சிக்குச் சிகிச்சை அளிக்காததும் அரைகுறையாக சிகிச்சை அளிப்பதுமே புறஉள்நாக்கு சீழ்க்கட்டிக்குக் காரணம். இதனால் தொற்று உள்நாக்கின் சுற்றுப் புறத்தில் பரவுகிறது. இப்பகுதியில் தளர்வான இணைப்புத் திசுக்கள் இருப்பதால் எளிதில் சீழ்க்கட்டி ஏற்படுகிறது.
மருத்துவர் அறிகுறிகளைக் கேட்டறிந்தும், தொண்டையும் உள்நாக்கையும் சோதித்தும் நோயைக் கண்டறிகிறார்.
தொற்றைக் கட்டுப்படுத்த நுண்ணுயிர்க்கொல்லிகள் அளிக்கப்படுகின்றன. பென்சிலினுக்கு ஒவ்வாமை உள்ளவர்களுக்குப் பொதுவாகக் கிளிண்டோமைசின் அளிக்கப்படுகிறது.
அழுத்தப்பட்ட திசுக்களினால் ஏற்படும் வலியைக் குறைக்க அறுவை மூலம் சீழ் அகற்றவும் படலாம்.
ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020
பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள...
24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள்...
இத்தலைப்பில் மருத்துவம், காவல்துறை மற்றும் தீயணைப்...
ரத்த அழுத்தத்திற்கான ஹோமியோபதி சிகிச்சை பற்றி இங்க...