ஜலதோஷம் (சளி), காய்ச்சலுக்கு அடுத்து குழந்தைகளை அதிக அளவில் பாதிப்பது காது வலி, பொதுவாக, பிறந்து ஆறு முதல் இருபது வாரங்கள் ஆன குழந்தைகளுக்கு இந்தக் காது வலி அதிக அளவில் வருகிறது.
இந்தக் காது வலியை உடனடியாக குணப்படுத்தாவிட்டால் மீண்டும் வலி ஏற்பட வாய்ப்புகள் மிக மிக அதிகம். மேலும், காதில் சீழ் வடிதல், காது கேளாமல் போதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படும். இதனால், குழந்தைகளின் பேச்சுத் திறன் கூட பாதிக்கப்படும். சில சமயங்களில், காது வலி தானாகவே சரியாகிவிடும்.
குழந்தைகளுக்கு ஜலதோஷம் (சளி) பிடிக்கும்போது, தொண்டை முழுவதும் புண்ணாகி வீங்கிவிடும். அதனால், தொண்டையில் இருந்து காது வரை செல்லும் யூஸ்டேஷியன் குழாயின் ஒரு முனையானது (தொண்டையில் இருக்கும் குழாய்) அடைபட்டுவிடும். மேலும், காற்று உறிஞ்சப்பட்டு, காதுப்படலமானது உள்நோக்கி நகருவதால், வலி ஏற்படுகிறது.
காது வலிக்கான அறிகுறிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். காது வலியால் குழந்தைகள் எரிச்சலுடனும், சரியாகத் தூங்க முடியாமலும் அவதிப்படும். குழந்தைகள் சரியாகச் சாப்பிடமாட்டார்கள். அடிக்கடி காதுகளை பிடித்து தேய்த்துக் கொண்டோ, காதுகளை இழுத்துக் கொண்டோ இருப்பார்கள். ஒரு சில குழந்தைகளுக்குக் காயச்சல் இருக்கும். காதில் இருந்து சீழ் வடியலாம். இருமல், சளித் தொல்லை போன்றவை இருக்கும். காது சரியாகக் கேட்காமல் இருக்கும்.
பிறந்து ஒரு மாதம்கூட நிறைவடையதாக குழந்தைகளுக்குக் காது வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும். இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தையாக இருந்தாலும் டாக்டரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
காதில் பிரச்சினை ஏற்பட்டால் நான் மரபு ரீதியான சிகிச்சைகளைப் பயன்படுத்தலாமா?
கூடாது. அது காதுப் பறையைச் சேதப்படுத்தி கடுமையான காது தொற்று நோய்க்கு வழிவகுக்கலாம்.
இசைப் பிரியரான நான் இயர்போனை அதிகம் பயன்படுத்துகிறேன். இது தீங்கானதா?
இசை சத்தமாக இருந்தாலோ, நீண்ட நேரம் இசையைக் கேட்டாலோ காது கேட்கும் திறனை இழக்கும் ஆபத்து அதிகரிக்கிறது. தொடர்ந்து அதிக ஒலியைக் கேட்டால் கேட்கும் திறன் பாதிக்கப்படும். இசையை இயர்போனில் கேட்கும் போது மெதுவாகவும் இடைவெளி விட்டும் கேட்பது நல்லது.
காதுக் கோளாறு ஏற்பட்டால் எப்போது நான் மருத்துவரை அணுக வேண்டும்?
கேட்கும் திறன் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நான் எவ்வாறு தொடர்பு கொள்ளுவது?
காது கேளாதாரோடு தொடர்பு கொள்ள சைகை மொழி பயன்படுகிறது. காது கேளாதார் மற்றும் காது கேட்போர் ஆகிய இருதரப்பாரின் இடையில் இருக்கும் இடைவெளியைக் குறைக்க சைகை மொழிக் கல்வியைப் பல நிறுவனங்கள் வழங்குகின்றன.
ஆதாரம்: தினகரன் நாளிதழ்
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020
காது… மூக்கு… தொண்டை… பிரச்சனைகள் பற்றிய குறிப்புக...
இடைச்செவி அழற்சி பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப...
காதுகளிலிருந்து திரவம் வடிவதற்கான காரணங்கள், அறிகு...
காது பிரச்சனைகளை சமாளிக்கும் முறைகள் பற்றி இங்கு வ...