பல நோய்க்காரணிகளை உள்ளடக்கிய கண் கோளாறுகளின் ஒரு தொகுதியே கண்ணழுத்த நோய் என்று அழைக்கப்படுகிறது. உள்விழி அழுத்தத்தால் உண்டாகும் நரம்புக் கோளாறே இதன் நோய்க்கூறு ஆகும். கண்ணுக்குள் அதிகமாகும் திரவ அழுத்தம் பொதுவாக இதனோடு தொடர்புடையது. அதிகமான உள்விழி அழுத்தமே (21 mmHg or 2.8 kPa-க்கு மேல்) முக்கியமான மாறுபடும் ஆபத்துக் காரணியாகும். ஆயினும் பலருக்குப் பல ஆண்டுகளாக கண்ணழுத்தம் இருந்து வந்தாலும் எந்தச் சிதைவும் ஏற்படாது. ஒரு சிலருக்குக் குறைந்த கண் அழுத்தத்திலும் கண் சிதைவு உண்டாகும். சிகிச்சை அளிக்காவிட்டால் விழிநரம்புக்கு சேதாரம் ஏற்பட்டு நாளடைவில் பார்வையிழப்பு உண்டாகும் சாத்தியக் கூறுகள் உள்ளன.
கண்ணழுத்த நோயின் வகைகள்:
கண்ணழுத்த நோயில் நான்கு முக்கிய வகைகள் உண்டு:
நாட்பட்ட கண்ணழுத்த நோய்: இவ்வகை நோய் மிகவும் மெதுவாக அதிகரிப்பதால் காணும்படியான எந்த அறிகுறியும் இருப்பதில்லை. முதலில் பக்கப்பார்வையே பாதிக்கப்படுவதால் தங்கள் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக யாரும் அறிவதில்லை. விழியின் புறவட்டத்தில் இருந்து மையத்தை நோக்கி மெதுவாகப் பார்வை இழப்பு ஏற்படுகிறது. பார்வை மாற்றம் வயதோடு தொடர்பு உடையது. இதனால் உங்கள் கண்களை முறையாகச் சோதனை செய்து கொள்ள வேண்டும்.
மூடிய-கோண கண்ணழுத்த நோய்: அறிகுறிகள் வேகமாக உருவாகின்றன, அவையாவன:
இரண்டாம் நிலை கண்ணழுத்த நோய்: இது பிற காரணங்களாலோ அல்லது விழிநடுப்படல அழற்சி போன்ற கண்காயங்களாலோ உருவாகும். பொதுவாகக் கண்ணழுத்த நோயின் அறிகுறிகளும் பிற கண் நோய் அறிகுறிகளும் ஒன்று போலவே தோன்றும். உதாரணமாக விழிநடுப்படல அழற்சியால் கண் மற்றும் தலை வலி உண்டாகும்.
வளர்ச்சிநிலை கண்ணழுத்த நோய்: இளம் வயது காரணமாக இதன் அறிகுறிகளைக் கண்டறிவது கடினம். இருப்பினும் கீழ்வரும் அறிகுறிகள் தென்படலாம்:
கண்ணின் ஒரு பகுதியில் ஏற்படும் தடங்கலே கண்ணழுத்த நோய்க்குக் காரணம். தடையின் காரணமாகத் திரவம் கண்ணில் இருந்து வடிய முடிவதில்லை. இதனால் உள்விழி அழுத்தம் அதிகரிக்கிறது.
இப்பாதிப்போடு தொடர்புடைய ஆபத்தான காரணிகள்:
வயது: வயதானவர்களுக்குக் கண்ணழுத்தம் உண்டாகும் அபாயம் அதிகம்.
இனம்: ஆப்பிரிக்க அல்லது ஆப்பிரிக்க காரிபியன் இன மூலம் உடையவர்களுக்கு நீடித்தத் திறந்த-கோண கண்ணழுத்த நோய் உண்டாகும் அபாயம் அதிகம். ஆசிய இன மூலம் கொண்டவர்களுக்குக் கடும் மூடிய-கோண கண்ணழுத்த நோய் உண்டாகும் ஆபத்து உள்ளது. மருத்துவ வரலாறு – நீரிழிவு நோய் கொண்டவர்களுக்குக் கண்ணழுத்த நோய் ஏற்படும் வாய்ப்பு கூடுதலாகும். கண்ணில் மிகை அழுத்தம் இருந்தால் நீடித்த திறந்த-கோண கண்ணழுத்த நோய் உண்டாகும்.
குடும்ப வரலாறு: பெற்றோர், உடன்பிறந்தோர் ஆகிய குடும்ப உறுப்பினர்களுக்குக் கண்ணழுத்த நோய் இருந்தால் நோய் ஏற்படும் அபாயம் அதிகம்.
கண் பரிசோதனை செய்து கண்ணழுத்த நோயைக் கண்டறியலாம்.
சோதனைகள் வருமாறு:
கண் சொட்டு மருந்துகள் மூலம் உள்விழி அழுத்தத்தைக் குறைக்கலாம்.
இது குறிப்பான தகவல் மட்டுமே. சிகிச்சைகளுக்கு உங்கள் மருத்துவரையே கலந்தாலோசிக்க வேண்டும்.
பார்வை இழப்பே கண்ணழுத்த நோயின் முக்கிய சிக்கலாகும். எனவே ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருத்துவம் அளிப்பது முக்கியமானது.
ஆதாரம் : தேசிய சுகாதார இணைய தளம்
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020
பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள...
24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள்...
ரத்த அழுத்தத்திற்கான ஹோமியோபதி சிகிச்சை பற்றி இங்க...
3 வகை உடல் 6 வகை பருமன் பற்றி இங்கு கொடுக்கப்பட்டு...