வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்வதற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சீதோசன நிலை மிகவும் உகந்ததாக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரதான வேளாண் பயிர்களான நெல், கேழ்வரகு, துவரை, கொள்ளு, நிலக்கடலை, மா மற்றும் தென்னை அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சராசரயாக 842 மி.மீ மழை ஒவ்வொரு வருடமும் சராசரியாக 59 நாட்கள் பொழிகிறது. சென்ற ஆண்டு 2017-ல் 1,130 மி.மீ பொழிந்தது அதனால் விவசாயிகள் அதிக பரப்பளவில் பயிர்சாகுபடி செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே.ஆர்.பி அணை, கெலவரபள்ளி அணை, பாரூர் ஏரி, பாம்பாறு மற்றும் சூளகிரி சின்னாறு இவைகள் அனைத்து வேளாண் பயிர்கள் சாகுபடி செய்வதற்கான பிரதான நீர் ஆதாரங்கள் ஆகும். கே.ஆர்.பி அணையின் மொத்த உயரமான 52 அடியில் 39.05 அடி தண்ணீர் உள்ளது. இதன் வாயிலாக 9,012 ஏக்கர் நிலம் நீர்பாசனம் பெறுகிறது. கெலவரபள்ளி அனையின் மொத்த உயரமான 44.28 அடியில் 41.05 அடி உயரம் தற்போது பாசனநீர் உள்ளது, இதன் வாயிலாக 9,083 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. பாரூர் பெரிய ஏரியின் மொத்த உயரத்தில் 12.90 அடி தண்ணீர் உளளது இதன் மூலம் 2,400 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. பாம்பாறு மற்றும் சூளகிரி சின்னாறுகளிலும் இவ்வாண்டு நல்ல மழை பெய்ததால் நீர் நிரம்பி சுமார் 5,871 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு மூலமாக இந்த பிரதான நீர் ஆதாரங்கள் பாசன நீர் பெறுகிறது. இதன் மூலம் சுமார் 27,695 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
பாசன நீர் ஆதாரங்கள்
வ. எண் |
அணைகளின் பெயர் |
மொத்த கொள்ளளவு (அடி) |
நீர்பாசன பரப்பு (ஏக்கர்) |
1 |
கே.ஆர்.பி அணை |
52.0 |
9012 |
2 |
கெலவரப்பள்ளி அணை |
44.3 |
9083 |
3 |
பாரூர் ஏரி |
15.6 |
4729 |
4 |
பாம்பாறு |
19.6 |
4000 |
5 |
சூளகிரி சின்னாறு |
32.8 |
871 |
பிரதான பயிர்கள் – பயிர் சாகுபடி முறைகள்
வ.எண் |
பயிர்சாகுபடி நில வகைகள் |
பயிர் சாகுபடி முறைகள் |
பருவம் |
1 |
நீர்பாசனம் நிலம் |
நெல் – நெல் |
கார, சம்பா, நவரை |
2 |
நீர்பாசனம் நிலம் |
நெல் – காய்கள் |
காரிப் ராபி |
3 |
மானவாரி |
பயிறு வகைகள் (துவரை) |
காரிப் ராபி |
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உணவு பயிரான நெல், 25700 எக்டரில் பயிரிடப்பட்டு, 1.53 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் சாகுபடி செய்வதால், நெல்லில் குறிப்பிடத்தக்க உற்பத்தி கிடைக்கிறது. சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 15600 எக்டரில் திருந்திய நெல் சாகுபடி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடைபிடிக்கப்படுகிறது. தற்போது திருந்திய நெல் சாகுபடி முறையில் நவம்பர் மாத முடிய 9000 எக்டரிலும், வரும் நவரை பருவ காலத்தில் 7000 எக்டரிலும் பயிர் செய்யப்படும் சராசரியாக எக்டருக்கு சாதாரண முறையில் 6100 கிலோவும், திருந்திய நெல் சாகுபடி முறையில் 9200 கிலோவும் கிடைக்க பெறுகிறது. மொத்தமுள்ள நெல் சாகுபடிப்பரப்பில் 66 சதவீதம் திருந்திய நெல் சாகுபடி முறை கடைபிடிக்க பல செயல் விளக்கங்கள், பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு மூலம் சிறப்புக் திட்டம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறோம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயறு, துவரை பயறு தனியிடத்தை பிடித்து 12000 எக்டரில் மானாவரி பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், துவரை நாற்று நடவு சாகுபடி முறை ஒரு வெற்றியடைந்த தொழில் நுட்பமாக கடைபிடிக்கப்பட்டு, சாதாரண முறையை காட்டிலும் ஒன்னரை மடங்கு அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த துவரை நாற்று நடவு முறையினால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைப்பதால்,திருந்திய பயறு சாகுபடி முறை முழு அளவில் கடைபிடிக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பச்சைப்பட்டாணி போல, பச்சை துவரை காயாக விற்பதால், விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை ஈட்டி தருகிறது. மேலும், வறுகடலையாகவும், ஊட்டச்சத்து மாவும், பருப்புப்பொடியாக மதிப்பு கூட்டு பொருளாக விற்பனை செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரும்பின் இயல்பான பரப்பு 950 எக்டர். கரும்பின் சராசரி உற்பத்தி திறன் 85 மெ.ட/எக்டர் ஆகும். கரும்பின் உற்பத்தி திறனை அதிகரிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் சிறப்பு திட்டமான நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டம் (SSI) இம்மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2012 – 2013) 40 எக்டேரும், நடப்பு ஆண்டில் 50 எக்டேரும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய தொழில் நுட்பத்தில் ஒரு பருவைக் கொண்ட குழிதட்டு நாற்றங்கால், நீரில் பரவும் உரங்களைக் கொண்டு சொட்டு நீர்ப் பாசனம் மூலம் உரமிடுதல், ஊட்டச் சத்து கலவை மற்றும் களைக்கொல்லி இடுதல் போன்ற இடுபொருட்கள் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதால் 30 – 40% உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த வேளாண் பாரம்பரிய பொருட்களை பிரபலம்படுத்துவது என முக்கிய நோக்கமாக மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. சிறுதான்ய உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு தொழில் நுட்பங்கள் மூலம் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சிறுதான்யப் பயிர்களில் முக்கிய பயிராக இராகி பயிர் விளங்குகிறது. மேலும், கம்பு, சோளம், சாமை பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. சிறுதான்ய பரப்பை அதிகரிக்க நடப்பு தரிசான 24180 எக்டர் பரப்பினை, வருடம் தோறும் 10 சதவீதம் என்ற அளவில் சாகுபடி பரப்பாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மொத்த இராகி உற்பத்தியில், உணவுக்கு போக மீதமுள்ள அதிக படியான இருக்கும் இராகியை, மதிப்பு கூட்டு பொருளாக மாற்றுவதே இத்தருணத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணியாகும். ஆதலால் மத்திய சிறப்பு மண்டலம், ராகி பயிருக்கு ஒசூரில் “வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்” மூலம் ரூ.5 கோடி முதலீட்டில் 5 ஏக்கர் பரப்பளவில் 90% சதவீத மத்திய அமைச்சகம் மூலமும் 10% பங்கு தனியார் மூலதனத்துடனும் ஆரம்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உழவர் பயிற்சி நிலையம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு அவ்வப்போது தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்படும் புதிய தொழில்நுட்பங்கள், புதிய பயிர் இரகங்கள் ஆகியவற்றை விவசாயிகளுக்கு கொண்டு செல்லும் பாரமாக திகழ்கிறது. உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் விவசாயிகளுக்கு கிராம அளவிலான 22 பயிற்சியும், உழவர் விவாதக்குழு அமைப்பாளர்களுக்கு 10 பயிற்சியும் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பயிற்சியின் போது விவசாயிகளுக்கு செயல்விளக்கங்களும் செய்து காண்பிக்கப்படுகிறது. முன்னோடி விவசாயிகள் மற்றும் உழவர் விவாதக்குழு அமைப்பாளர்களுக்கு அருகாமையிலுள்ள மண்டல ஆராய்ச்சி நிலையங்களுக்கு கண்டுனர்தல் சுற்றுலாவும், புதிய தொழில்நுட்பத்தை கடைபிடித்து அதிக மகசூல் பெறும் விவசாயி ஒருவருக்கு சிறந்த விவசாயிக்கான பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.
பிரதம மந்தரி பயிர் காப்பீட்டு திட்டம் மூலமாக, விவசாயிகள் நீடித்த நிலையான விவசாயம் மேற்கொள்ள கீழ்க்கண்ட வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
நோக்கம்
திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்
பிரதம மந்தரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள் தகுதியுடையவர்கள்.
பயனாளி:
பிரதம மந்தரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள் தகுதியுடையவர்கள்
பயன்கள்:
அசாதாரன சூழ்நிலைகளால் விவசாயிகளுக்கு பயிர் இழப்பு மற்றும் பயிர் பாதிப்பு ஏற்படும் போது நிதி உதவி வழங்குதல்
மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து “மண்வள அட்டை இயக்கம்” எனும் புதிய இயக்கத்தினை 2015 -16ம் ஆண்டு தொடங்கி அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நிகர சாகுபடி பரப்பில் நிலையான நீர்ப்பாசன வசதி 58385 ஹெக்டேர், மானாவரி பரப்பு 1,27,370 ஹெக்டர் மொத்தம் 1,85,675 ஹெக்டர் பரப்பளவில் 10 வட்டாரங்கள் பயன்பெறும் வகையில் மண் மாதிரிகள் சேகரம் செய்யப்பட்டு வருகிறது. நிலையான நீர்ப்பாசன வசதியுள்ள நிலத்தில் 2.5 ஹெக்டேருக்கு ஒரு மண் மாதிரியும் மானாவரி நிலப்பரப்பில் 10 ஹெக்டேருக்கு ஒரு மண் மாதிரியும் மொத்தம் 37340 மாதிரிகள் இத்திட்டத்தில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. 2017-18ம் ஆண்டு இலக்கான 18650 மண் மாதிரிகள் வோளண்மைதுறை மூலமாக சேகரம் செய்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மண் மாதிரிகள் உதவி வேளாண்மை அலுவலர்களால் விவசாயிகள் நிலத்தில் நேரடியாக உலக இடங்காணல் அமைப்பு கருவியினைக் கொண்டு நிர்ணயம் செய்து மண்மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எடுக்கப்படும் மண் மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலம் மண்ணின் நயம், கார, அமில நிலை, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து போன்ற பேரூட்டச்சத்துக்கள் அளவையும், கால்சியம், மக்னீசியம் போன்ற 2-ம் நிலை சத்துக்கள் மற்றும் ஜிங்க், மாங்கனீசு இரும்பு, போரான் போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் தெளிவாக அறிய இயலும்.
இத்திட்டத்தின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2015-16 மற்றும் 2017-18 ல் 37340 மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, இதுவரை 243115 மண்வள அட்டைகள் விவசாய மற்றும் பண்ணைக்குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மண்வள அட்டை பரிந்துரையின்படி, பயிர்களுக்கு தேவையான அளவு உரங்கள் மட்டும் பயன்படுத்தி விவசாயிகள் இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் என்ற இலக்கினை அடைந்து வாழ்வின் தரத்தினை உயர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பயனாளி:
அனைத்து விவசாயிகளும் பயனடையலாம்
பயன்கள்:
மண் மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலம் மண்ணின் நயம், கார, அமில நிலை, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து போன்ற பேரூட்டச்சத்துக்கள் அளவையும், கால்சியம், மக்னீசியம் போன்ற 2-ம் நிலை சத்துக்கள் மற்றும் ஜிங்க், மாங்கனீசு இரும்பு, போரான் போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் தெளிவாக அறிய இயலும்
அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளில் உள்ள தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பது ஆகும். மேலும், அட்மா திட்டத்தின் வாயிலாக இதர துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம். அட்மா திட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, மீன் வளர்ப்புத்துறை, வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிய துறைகள் ஒன்றிணைந்து அவ்வப்போது விவசாயிகளுக்கு பயிற்சி, கண்டுனர்தல் சுற்றுலா, செயல்விளக்கங்கள், பண்ணைப்பள்ளி மற்றும் வெளிமாநில சுற்றுலாக்களின் மூலம் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் கற்றுதரப்படுகிறது. இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பயனாளி:
அனைத்து விவசாயிகளும் பயனடையலாம்
பயன்கள்:
வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளில் உள்ள தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பது.
பெயர் / பதவி |
தொடர்பு எண் |
மின்னஞ்சல் முகவரி |
முகவரி |
வேளாண்மை இணை இயக்குநர்,கிருஷ்ணகிரி |
9443906424 |
jdakrishnagiri2015[at]mail[dot]com |
வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், கிருஷ்ணகிரி |
வேளாண்மை துணை இயக்குநர்(மா.தி), கிருஷ்ணகிரி |
9361112438 |
jdakrishnagiri2015[at]mail[dot]com |
வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், கிருஷ்ணகிரி |
வேளாண்மை துணை இயக்குநர்(ம.தி), கிருஷ்ணகிரி |
9443006664 |
jdakrishnagiri2015[at]mail[dot]com |
வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், கிருஷ்ணகிரி |
வேளாண்மை துணை இயக்குநர் (உபநி), கிருஷ்ணகிரி |
9443906424 |
jdakrishnagiri2015[at]mail[dot]com |
வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், கிருஷ்ணகிரி |
வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், கிருஷ்ணகிரி |
– |
agri.pa.krishnagiri[at]gmail[dot]com |
வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், கிருஷ்ணகிரி |
வேளாண்மை உதவி இயக்குநர்(த.க), கிருஷ்ணகிரி |
8072245916 |
jdakrishnagiri2015[at]gmail[dot]com |
வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், கிருஷ்ணகிரி |
வேளாண்மை உதவி இயக்குநர், கிருஷ்ணகிரி |
8072245916 |
adakrishnagiri[at]gmail[dot]com |
வேளாண்மை விரிவாக்க மையம், கிருஷ்ணகிரி |
வேளாண்மை உதவி இயக்குநர்(பொ), காவேரிப்பட்டிணம் |
9486448460 |
adava[at]gmail[dot]com |
வேளாண்மை விரிவாக்க மையம், காவேரிப்பட்டிணம் |
வேளாண்மை உதவி இயக்குநர், பர்கூர் |
9486755252 |
adabargur[at]gmail[dot]com |
வேளாண்மை விரிவாக்க மையம், பர்கூர் |
வேளாண்மை உதவி இயக்குநர், வேப்பனப்பள்ளி |
9487638100 |
adaveppanapalli1[at]gmail[dot]com |
வேளாண்மை விரிவாக்க மையம், வேப்பனப்பள்ளி |
வேளாண்மை உதவி இயக்குநர், மத்தூர் |
9940041314 |
adakrishnagiri[at]gmail[dot]com |
வேளாண்மை விரிவாக்க மையம், மத்தூர் |
வேளாண்மை உதவி இயக்குநர், ஊத்தங்கரை |
9788876876 |
adakrishnagiri[at]gmail[dot]com |
வேளாண்மை விரிவாக்க மையம், ஊத்தங்கரை |
வேளாண்மை உதவி இயக்குநர், சூளகிரி |
9486755252 |
adashoolagiri[at]gmail[dot]com |
வேளாண்மை விரிவாக்க மையம், சூளகிரி |
வேளாண்மை உதவி இயக்குநர், ஓசூர் |
9944439331 |
adahsr[at]gmail[dot]com |
வேளாண்மை விரிவாக்க மையம், ஓசூர் |
வேளாண்மை உதவி இயக்குநர், கெலமங்கலம் |
9442395835 |
adakmgm[at]gmail[dot]com |
வேளாண்மை விரிவாக்க மையம், கெலமங்கலம் |
வேளாண்மை உதவி இயக்குநர், தளி |
9442630246 |
adaagrithally[at]gmail[dot]com |
வேளாண்மை விரிவாக்க மையம், தளி |
ஆதாரம் : https://krishnagiri.nic.in/
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020
கிராமப்புற வளர்ச்சி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப...
தொழில் துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள...
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நிர்வாக அமைப்பு பற்றி இங்...
சுகாதார துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டு...