அளிக்கப்படும் சேவைகள்:
ஆன்லைனில் வேலைவாய்ப்புச் செய்திகள்
அளிக்கப்படும் சேவைகள்:
ஆன்லைனில் அரசுச் செய்திகள்
அளிக்கப்படும் சேவைகள்:
ஆன்லைனில் தேர்வு முடிவுகள்
அளிக்கப்படும் சேவைகள்:
ஆன்லைனில் சந்தை நிலவரம்
அளிக்கப்படும் சேவைகள்:
ஆன்லைனில் வானிலை அறிக்கை
அளிக்கப்படும் சேவைகள்:
உத்தரகண்ட் நிலவிவர ஆவணங்கள்
உத்தரகண்ட் அரசாங்கம், குடிமக்களுக்குப் பயன்படும் விதத்தில் நிலவிவர ஆவணங்களின் வலைதளம் ஒன்றை, 2006 நவம்பர் 6ஆம் தேதி ஆரம்பித்தது. இந்த வலையக விலாசத்தின் பெயர் “தேவ்பூமி”. இதன் நோக்கம், மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இருக்கும் அனைத்து நிலங்களின் முழு விவரங்களையும் இணையதளத்தில் கிடைக்கச் செய்வதுதான்.
இந்த இணையதள வலையகத்தைத் துவக்கியதன் மூலம், மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களது நிலங்கள் பற்றிய விவரங்களை, இணைய தளத்தின் உதவியுடன், எப்போது வேண்டுமானாலும், எங்கே இருந்தாலும் பார்த்து அறிந்துகொள்ள முடியும். இந்த வலையகத்தில் இருக்கும் அனைத்து விவரங்களும் இந்தி மொழியில்தான் பதிவுசெய்யப்படுகின்றன. வேண்டிய விவரங்களைத் தேடுவது மிகவும் சுலபமாக்கப்பட்டுள்ளது. வேண்டிய நில விவரத்தை அதன் சொந்தக்காரர் பெயர் அல்லது பகுதியின் எண் ஆகியவற்றின் மூலமே தேடிப் பெற முடியும். இந்த எண்ணுக்கு முன்னால் எந்த மாவட்டத்தில், எந்தக் கிராமத்தில் இந்த நிலம் இருக்கிறது என்பதைப் பதிவுசெய்ய வேண்டும்.
இந்த வலையகத்தில், 16,618 ரெவின்யு கிராமங்களில் உள்ள நில விவரங்கள் காணப்படுகின்றன. இவற்றில், 78,21,462 கூட்டாக மற்றும் தனியாக நிலங்களைச் சொந்தமாக வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள். இந்த நிலங்கள் பற்றிய ஆவணங்களின் எண்ணிக்கை 13,03,916. ‘தேவ் பூமி’ வலைதளம் இருப்பதால் விவசாயிகளுக்குப் பெரும் லாபங்கள் உண்டாகும். விவசாயிகள், இனி, தங்களது நில விவகாரங்கள் குறித்த விவரங்களை அறிய கிராம அதிகாரிகள் பின்னால் அலைய வேண்டியதில்லை. இப்போதைக்கு இணையதளத்தில் நில விவரங்களைத்தான் பார்க்க முடியுமே தவிர, இதுதான் சரியான விவரம் என்று அரசின் முத்திரை பெற்ற நில விவர ஆவணங்களைப் பெற முடியாது. இது பொதுவான இணையதளத்தில் கிடைக்காது. குறிப்பிட்ட நில விவரங்களைப் பெற வேண்டுமானால், அந்தந்தக் கிராமத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்று, நில ஆவணங்கள் கணினி மையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
இது போன்று மிகச் சரியான நில ஆவணங்களை (ஆர்ஓஆர்) பெறுவதற்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் என்ன? ஆர்ஓஆர்இன் முதல் பக்கத்திற்கு ரூ.15/- மட்டும்தான். அடுத்தடுத்து வரும் பக்கங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.5/- மட்டுமே.
கடைசியாக மாற்றப்பட்டது : 4/16/2020
அருணாச்சல பிரதேசத்தில் மக்களுக்கு கிடைக்கும் சேவைக...
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதியுத...
தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் அம்மா அழைப்பு மையம்...
அந்நிய நாட்டவர் மற்றும் அந்நிய சுற்றுலாப் பயணிகள் ...