அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் வாக்குப்பதிவு அமைதியாகவும், நேர்மையாகவும் நடந்திடவும், வாக்காளர்கள் எந்த வித தொந்தரவும், இடையூறும் இல்லாது முழு சுதந்திரத்துடன் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்திடவும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சி தொண்டர்களுக்கு தகுந்த பேட்ஜுகளும், அடையாள அட்டைகளும் வழங்க வேண்டும். வாக்குப்பதிவு நடைபெறும் அறைகளில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகள் சுத்தமான (வெள்ளை) காகிதத்தில் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதையும், மேலும் அவற்றில் யாதொரு சின்னமோ, வேட்பாளரின் பெயரோ கட்சியின் பெயரோ இடம் பெற்றிருக்க கூடாது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்றும், அதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாகவும் மதுபான வினியோகம் செய்யக்கூடாது. கட்சி தொண்டர்களிடையேயும், வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடையேயும் மோதல்கள், கைகலப்பு மற்றும் அமளி போன்றவை ஏற்படாத வகையில் வாக்குச்சாவடிகளுக்கு அருகில் அரசியல் கட்சிகளாலோ அல்லது வேட்பாளர்களாலோ அமைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு அருகில் தேவையில்லாமல் கூட்டம் கூடுவதை அனுமதிக்கக்கூடாது. வேட்பாளர்களின் முகாம் எளிமையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அங்கே சுவரொட்டிகள், கொடிகள், சின்னங்கள் மற்றும் பிற தேர்தல் பிரசார கருவிகள் இடம் பெற்றிருக்க கூடாது. முகாம்களில் உணவு வினியோகம் செய்யப்படுவதும், கூட்டம் கூடுவதும் அறவே கூடாது.
வாக்குப்பதிவு அன்று வாகனங்களை வாடகைக்கு விடுவதற்கான கட்டுப்பாடு நெறிமுறைகளை தவறாது கடைப்பிடித்து அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்தகைய வாகனங்கள் அதற்கான அனுமதி சீட்டினை பெற்று அவற்றினை தெளிவாக தெரியுமாறு அந்தந்த வாகனங்களில் ஒட்ட வேண்டும்.
ஆதாரம் : தமிழக தேர்தல் ஆணையம்
கடைசியாக மாற்றப்பட்டது : 5/21/2020
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றிய குறிப்புகள்
வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி? பற்றிய குறி...
தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளின் விபரங்களின்...
வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் பதிவு செய்யவேண்டி...