நோக்கம்
மாவட்டப் பொதுக்குழுவிற்கான இடம், நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை கூட்டம் நடத்துவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாக மாவட்ட அமைப்புச் செயலாளர் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
மாவட்டப் பொதுக்குழுவின் பணிகள்
- பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் செயற்குழுக்களால் முன் வைக்கப்படுகின்ற இயக்கத்தின் செயலறிக்கைகள், இயக்கத்தொடர்பான பிற அறிக்கைகள், செயல்திட்டங்கள் முதலியன குறித்துத் திறனாய்வு செய்தல் மற்றும் அவை மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- மூன்றாண்டுகளுக்கொருமுறை மாவட்டப் பொறுப்பாளர்களாக மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் ஒருவர், பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான செயலாளர்கள், துணைச்செயலாளர்கள் மூவர், நிதிச்செயலாளர் ஆகியோரையும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் (பிரதிநிதிகள்) ஆகியோரையும் தெரிவு அல்லது தேர்வு செய்தல்.
- செயற்குழுக்கள் முன்வைக்கும் மூன்றாண்டுகளுக்கான செயல்திட்டங்களை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.
- தணிக்கைக் குழுவின் அறிக்கையைத் திறனாய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.
- சிறப்புப் பொதுக்குழுவில் காலியாகவுள்ள இடங்களுக்கு பொறுப்பாளர்கள் நிரப்புதல் அல்லது நிரப்பியதற்கு ஒப்புதல் அளித்தல்.
விதிகள்
மாவட்டப் பொதுக்குழுவின் விதி 1
மாவட்டப் பொதுக்குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க வேண்டும். அதற்குக் குறைவாக இருப்பின், அக்கூட்டத்தில் முகாமையான முடிவுகள் எடுக்கவோ அல்லது தீர்மானங்களை நிறைவேற்றவோ கூடாது.
மாவட்டப் பொதுக்குழுவின் விதி 2
மாவட்டப் பொதுக்குழு நடைபெறும் இடம், நாள், நேரம் மற்றும் கூட்டத்திற்கான நோக்கங்கள் ஆகியவற்றை, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் ஒருமாதத்திற்கு முன்னதாக தெரியப்படுத்த வேண்டும்.
ஆதாரம் : தமிழ்நாடு சட்டப்பேரவை மன்றம்
கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020
0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments
நட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.
© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.